இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிவிலகியமை பல்வேறு மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் அரசியல் பிரமுகர்கள் இவர்களின் ஒற்றுமை குறித்து வரவேற்பு வெளியிட்டுள்ளன. அத்துடன், அவர்களை மீண்டும் அந்தப் பொறுப்புக்களை ஏற்குமாறு பௌத்த பீடங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதே வேளை, முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட காவல்துறை குழு இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





