இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் ஆட்சிக்காலம் முடிந்து பல மாதங்களும் வருடங்களுமாகின்றன. இதற்கு தேர்தல் நடாத்தாமை குறித்து அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள், மற்றும் தற்பொழுது இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நீதி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயத்தில் ஆளும் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே மிகக்கடுமையாக விவாதம் நடப்பது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.