இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஐ.நா பொதுச்சபையின் 73வது கூட்டத்தில் கடந்த புதன் கிழமை உரையாற்றினார். அவரது வருகைக்குக் கண்டனம் தெரிவித்து ஐ.நா முன்றலில் புலம்பெயர் தமிழர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவின் ஐ.நா உரை தொடர்பில் இலங்கை அரசியல் தலைவர்களின் கருத்துகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.