இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறை முன்னிலையில் முற்படுத்துமாறு மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுவது என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்துடன், சிரியாவில் இடம்பெறும் யுத்தத்தினை நிறுத்தக்கோரி வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.