இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படாமலேயே வீடுகளில் மரணிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரியூட்டவேண்டாம் என முஸ்லிம் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் தமிழ் அரசியல் தலைவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





