இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஐ.தே கட்சியின் வேண்டுகோளை அடுத்து பதவி நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள அதே வேளை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.