இலங்கையின் வடக்கில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச்கசூட்டு சம்பவங்கள் மற்றும் வாள் வெட்டுத்தாக்குதல்களுக்கு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளே காரணம் என்று தெரிவித்து வந்த அரசும் படைத்தரப்பும், இப்பொழுது அவர்கள் காரணமில்லை எனத் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.