இலங்கையின் அரசியலமைப்பில், 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது.
தமிழர் இனப்பிரச்சினைக்கு 13 வது அரசியலமைப்பு திருத்தம் ஏற்புடையதல்ல என தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவித்துவரும் நிலையில், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த போவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் பௌத்த குருமார்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





