இலங்கையில், புதிய அரசியலமைப்பு குறித்து இந்நாட்களில் அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக அறித்துள்ளமை தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.. இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.