இலங்கையில் தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள அனைத்து கட்சி கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையின் காரணமாக தமிழ் கட்சிகள் சில இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் 13வது அரசியலமைப்பு நிறைவேற்றம் குறித்து ஆராயப்பட்டதாகவும் அதற்கு எதிர்ப்புகள் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
--------
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





