அரசு பதவி விலக வேண்டும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் கடந்த வெள்ளி இரவு அவசரகால சட்டத்தின் இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதற்கு உள் நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தபட்டமைக்கான காரணத்தை இலங்கை அரசு விபரித்துள்ளதுடன் பொதுமக்கள் சட்டங்களை கடைப்பிடித்து முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.