இலங்கையில், முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பில் வடமாகாண சபையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை கூட்டத்தினை நடாத்த ஆளுநர் தடை விதித்துள்ளார். வடமாகாண சபையை கலைப்பதற்கு சிலர் முயற்சி செய்வதாக, வட மாகாண அவைத்தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.