இலங்கையில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும், தேர்தலினை ஒத்திவைக்குமாறும் எதிரணியை சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் முன்வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு கிழக்கு பகுதி உட்பட நாட்டின் பல இடங்களில் படையினரை தனிமைப்படுத்த பாடசாலை கட்டிடங்களை படையினர் பெற்றுக்கொண்டுள்ளமைக்கு பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





