இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார். அத்துடன், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து மன்னார் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்திய மீனவர்களினால் நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாடுகிறார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share





