ஐ.நா மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பல்வேறு முன்மொழிவுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிக்கையை தமிழ்க் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ள நிலையில், மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு புதிய கோணத்தில் அணுக இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





