இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளினதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம் நிறைவு பெற்று தற்போது மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் செயல்படுகின்றது.
அத்தோடு, ஏற்கனவே மாகாண அரசுகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீறப்பெறப்பட்டு வருவதாகவும் பல வருடங்களாக மாகாண சபைகளுக்கு தேர்தல் இடம்பெறாத நிலை காணப்படுகின்றது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது கவலையை வெளியிட்டு வருகின்றார்கள். மறுபுறம், தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




