இலங்கையில் எதிர்வரும் 11ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தினை நீக்கி மக்களின் இயல்பு வாழ்வை கொண்டுவரவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ்தாக்கத்திற்குட்பட்டு இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், த.தே.கூட்டமைப்பு பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியிருப்பது அரசியல் இலாபம் தேடும் முயற்சி என பல்வேறு தமிழ் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் விமர்சனம் செய்துள்ளன.
இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.





