இலங்கை அதிபர் சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு எதிராக கொழும்பில் மிகப்பெரிய பேரணி ஒன்று நேற்று முன் தினம், புதன்கிழமை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் வழிநடாத்தலில் இயங்கும் ஒன்றிணைந்த எதிரணியின் ‘மக்கள் சக்தி கொழும்புக்கு’ என்ற எதிர்ப்பு பேரணி கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.