இலங்கையில், போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க இலங்கை அரசு தீர்மானம் எடுத்துள்ளது குறித்த செய்திகள், மற்றும் முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து வடமாகாண சபையில் கடும்விவாதம் நடந்தது தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.