தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி அம்பாறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பேரணி ஒன்று கடந்த புதன்கிழமை ஆரம்பித்தது. இந்தப் பேரணி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share




