இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து, அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.