மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிபரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி சிந்திக்கப்படாத நிலையில் இது தொடர்பில் தமிழ்த் தரப்பிலிருந்து எழுந்த பலத்த கண்டனங்களை அடுத்து இதிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். இது குறித்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share





