இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேர்தலை நடாத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இவ்வறிப்பு வெளிவந்துள்ளது. மறுபுறம் பொருளாதார நெருக்கடி நிலை காணப்படும் சூழலில் தேர்தல் இடம்பெறுமா என்ற சந்தேகத்தின் மத்தியில் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





