ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியுள்ள நிலையில், பேரவையின் 43வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. ஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரையில் வெளிவரும் என்று அமைச்சர்கள் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உதயமாகியுள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share





