மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர், ஊழியர் மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதுடன், 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வசதியின் கீழ் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.