தமிழகப் பார்வை!
SBS Tamil Source: SBS Tamil
தமிழக சட்டசபையில் நிறைவேற்ற பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டத்திற்கு இந்திய உச்ச நீதி மன்றம் தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டது. இது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 23ம் தேதி நிறைவேற்றபட்ட சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்து விட்டார். ஆனால் தமிழக அரசால் நிறைவேற்ற பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் இந்திய உச்ச நீதி மன்றம் தமிழக அரசு போட்ட சட்டத்தை மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் வழக்கு விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கி வருவது தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share



