கறுப்புப் பண பதுக்கலிலும், முறைகேட்டிலும் ஈடுபடுவோருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்திய முழுவதும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல முக்கிய பிரமுர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர்கள்/நடிகைகள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்திக் சிதம்பரம், தமிழக அமைச்சர்கள், சமையல் எண்ணெய் தயாரிக்கும் காளீஸ்வரி நிறுவனம், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உட்பட, நாடு முழுவதும், 50 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தமிழக வி.ஐ.பி.க்களின் வீடுகளில் தொடரும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். இது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்