ஆர்.கே.நகர் இடை தேர்தல்

Photo. C Suresh Kumar Source: TOI, BCCL, CHENNAI
ஆர்.கே.நகர் இடை தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக மக்களின் அரசியல் மனநிலை என்ன என்பதை தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என்பதால், தமிழகத்தை சேர்ந்த முடிய அரசியல் காட்சிகள் ஆர்.கே.நகர் இடை தேர்தலில் வெற்றி பெற முழு முயற்சி எடுத்து வருகின்றன. கட்சிகளின் மேலும் வேட்பாளர் தேர்வை அனைத்து கட்சிகளும் முடிவு செய்து வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை திமுக கேட்டுள்ளது. ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தற்போது வரை விடை இல்லை. நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



