தமிழகத்தை வட்டி படுத்தும் பாடு!

Source: Raj
கந்து வட்டி கொடுமை காரணமாக தமிழகத்தில் ஒரு குடும்பம், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தது. மனைவி மற்றும் குழந்தைகள் தீயில் கருகி உயிர் இழக்க, குடும்ப தலைவர் மட்டும் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். கந்து வட்டிக்கு எதிராக பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காத காரணத்தால், ஒரு ஏழை குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கந்து வட்டிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் வட்டி பலவகை. தமிழகத்தில், ஏழை முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் வரை வட்டியென்னும் வலையில் சிக்கி மீள முடியாமல் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியளர் ராஜ்.
Share