தமிழகப் பார்வை!

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறையினர் கண்மூடி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு தங்கள் கண்டனத்தை தேறிவித்து உள்ளனர். ஆனால் சமூக விரோத சக்திகள் மீது மட்டுமே காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக காவல் துறையினர் தேறிவித்துள்ளனர். காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதி மன்றமும் கண்டனத்தை தேறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சிறிது நேரத்துக்கு முன்பு ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்று தேறிவிக்கப்பட்டுஉள்ளது.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now