தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
கர்ணனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை
FB Source: FB
பல்வேறு சர்ச்சையான உத்தரவுகளை பிறப்பித்து வந்த கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து இந்திய உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பல மாதங்களாகவே உச்சநீதி மன்ற நீதிபதிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்து நீதிபதி கர்ணன் தற்போது சிறைக்கு செல்ல இருக்கிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சிறைக்கு செல்லுவது இதுவே முதல் முறை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது நீதித்துறை வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Share



