பதவி இழக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?
Getty Source: Getty
அ.தி.மு.க.வில் உள் கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு "மைனாரிட்டி" அரசாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அதிமுக மூன்று அணிகளாக பிளவுபட்டு உள்ளதால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் மூன்று அணிகளாக பிரிந்துள்ளனர். ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அதிமுக ஆட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது. இதே நேரம் தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் தற்போது நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share


