குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கண்டன பேரணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் முழுவதும் 5 காவல் துணை ஆணையர்கள் தலைமையில், 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது இந்திய நிருபர் ராஜ்.
Share





