தமிழகப் பார்வை!

Cauvery

Source: SBS Tamil

இந்தியாவில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் தர இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் 192 டிஎம்சி கர்நாடக மாநிலம் தரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகம் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் தந்தால் போதும் என்று சிறிது நேரத்திற்கு முன்பு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும். காவிரி வழக்கின் தீர்ப்பு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவில் பரபரப்பு செய்தியாகியுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now