புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண் பேடி குறிக்கிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. புதுச்சேரியை நடைபெறும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த அதிகார மோதல் இந்த உத்தரவு மூலம் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் என்ற உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார் புதுச்சேரி முதலமைச்சர். பொதுவாக நம்பிக்கை இல்ல தீர்மானங்கள் சட்டசபையில் கொண்டு வரப்படுவது உண்டு. தமிழக அரசியலில் 'நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்' புதிது அல்ல. ஆனால் நடுநிலையாளராக பார்க்கப்படும் சட்டமன்றத்தின் சபாநாயகர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, திமுக சார்பில் நேற்று சட்டசபை செயலரிடம் மனு கொடுக்கப்பட்டது தமிழக அரசியல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு செய்திகள் குறித்து ஒரு பார்வை!
Share





