சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதையின் உருவப்படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்தை தெரிவித்தார். அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து தான் கற்பனையாக கூறவில்லை என்றும், நடந்ததைத்தான் சொன்னேன் என்று தெரிவித்தார். இதற்காக தான் ஒரு போதும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். ரஜினியின் சர்ச்சை பேச்சும் அதை தொடர்ந்து நிகழ்வுகளின் தாக்கங்கள் குறித்து ஒரு பார்வை. நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share





