குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததற்கு ஆதாரம் உண்டா?

Source: Getty
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. டார்வினின் கோட்பாடு அறிவியல் பூர்வமாக தவறு என்று தெரிவித்துள்ளார் அமைச்சர். "டார்வின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு அறிவியல் ரீதியாகத் தவறானது. நிரூபிக்கப்படாத ஒன்று. அதை கல்விப் பாடத்திலிருந்து நீக்க வேண்டும். மாற்றம் கொண்டு வர வேண்டும். மனிதன் எப்போதும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் குறிப்பிடவில்லை, யாரும் அப்படியொரு நிகழ்வைப் பார்த்ததாக கூறவில்லை" டார்வின் கோட்பாடு தவறு என்ற அமைச்சரின் பேச்சு அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் பேசியது சரியா? அதுபற்றிய மேலதிக விவரங்களை எடுத்து வருகிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ். உங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும் வயதுக்கும் :-) எல்லாமே இலகுதானே
Share



