பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் இன்று, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சிக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்று சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கிய நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்வி, குடும்ப அரசியல், உட்கட்சி பிரச்சனைகள், கூட்டணி குழுப்பங்கள் என ஏகப்பட்ட பிரச்சனைகளை அதிமுக சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி, உட்கட்சி பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய கூட்டம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பற்றிய மேலதிக விவரங்களை முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





