டிக் டாக் மொபைல் ஆப் செயலி! தமிழகத்தில் தடை!

Source: Raj
டிக் டாக் மொபைல் செயலியை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நேற்று தமிழக சட்டசபையில் பேசிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை டிக் டாக் செயலி சீரழிப்பது உண்மை என்றும் ப்ளூ வேல் விளையாட்டை போல் டிக் டாக் செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். டிக் டாக் செயலி தமிழகத்தில் மறைமுகமா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டிக் டாக் செயலியை பயன்படுத்துவது தங்களின் உரிமை என்று அந்த செயலியின் ஆதரவாளர்கள் கூறிவரும் அதே நேரத்தில் டிக் டாக் செயலி வரம்பை மீறி பயன்படுத்தப்படுவதாக குற்றம்ச்சட்டப்படுகிறது.
Share


