தமிழக அரசு பள்ளி பாடப் புத்தகங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய புத்தகங்களை நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். இதில் பிளஸ்-2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டை படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அட்டைப்படத்தில் பாரதியாரின் படம் உள்ளது. வழக்கமாக பாரதியாரின் தலைப்பாகை வெள்ளையில்தான் இருக்கும். ஆனால் இதில் ஆரஞ்சு அல்லது காவி நிறத்தில் தலைப்பாகை உள்ளது. இதுதான் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாரதியாரின் தலைப்பாகை ஏன் காவியாக உள்ளது. இது பாஜகவின் திட்டமிட்ட திணிப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை எழுப்பியுள்ளன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை
Share





