உள்ளே ஆட்டம், வெளியே போராட்டம் - சென்னையில் காவிரி Vs கிரிக்கெட்

Source: AAP
நேற்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பெரும் போரட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்வேறு காட்சிகள் மற்றும் அமைப்புகள், நேற்று ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற கூடாது என்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி உள்ள சாலைகளில் போராட்ட களமானது. பலத்த பாதுகாப்பு மத்தியிலும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பொதுவாக சென்னை அணி வெற்றி பெற்றால் கொண்டாட்டம் என்ற நிலை மாறி "சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது சிறிய செய்தியானது.
Share



