ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் - தமிழகத்தில் பரபரப்பு

Source: Raj
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரியும், தீர்ப்பை எதிர்த்தும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இது, தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எமது தமிழக நிருபர் ராஜ் தரும் செய்தி.
Share



