டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்போது பெரும் வன்முறையாக மாறியுள்ளது. நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இது வரை 20-பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு டெல்லியின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி வன்முறை குறித்து ஒரு பார்வை! வழங்குகிறார் நமது இந்திய செய்தியாளர் ராஜ்.
Share





