ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அதிமுக மூன்று அணிகளாக பிளவுபட்டு இருக்கிறது. தமிழகத்தின் எதிர் கட்சியான திமுக, அதிமுக ஆட்சியை களைத்து விட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவும் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருமா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.