சேலம்- சென்னை 8 வழி சாலை - போராடியவர்கள் கைது

Source: AAP
சேலம்- சென்னை 8 வழி சாலைக்கு திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு சேலம் மாவட்டத்தில், 29 கிராமங்களில், நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் துவங்கியது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் நிலங்களை இழக்கும் விவசாயிகள் இந்த பசுமை வழி சாலை திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தாலும், இந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது அரசு. இதே நேரம், பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசு திட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை போராடி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு நடிகர் மன்சூர் அலிகான், பியூஷ் மனுஷ் மற்றும் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராடியவர்கள் பலரை போலீசார் கைது செய்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



