முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம்

Source: Getty
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும், அவரின் மரணம் தொடர்பான செய்திகள் இன்னும் வந்த வண்ணம் உள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் குறித்த ஒரு பார்வை! வழங்குகிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share



