நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பு: தமிழகத்தில் 1500 வழக்குகள் பதிவு

Source: Raj
தமிழகத்தில் நேற்று தீபாவளி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டாலும், உச்ச நீதி மன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக, பலர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அதிகபட்சமாக 343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனுமதிக்காக நேரங்களில் பட்டாசு வெடித்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே நேரம் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யததற்கு தமிழகத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!
Share



