அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். அதிமுக அம்மா அணியில் உள்ள சுமார் இருபது சட்டமன்ற உறுப்பினரகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே நேரம் தினகரனை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பி.பண்ணீர்செல்வமும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே இரு அதிமுக அணிகள் இணையும் சத்தியம் என்று தெரிவித்துள்ளார். தினகரனின் வருகை அதிமுகவை மூன்றாக பிரிக்கும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிக அளவு சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவு அளித்தால், அதிமுக ஆட்சியே கவிழும் நிலை ஏற்படலாம்.
அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். அதிமுக அம்மா அணியில் உள்ள சுமார் இருபது சட்டமன்ற உறுப்பினரகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே நேரம் தினகரனை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பி.பண்ணீர்செல்வமும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே இரு அதிமுக அணிகள் இணையும் சத்தியம் என்று தெரிவித்துள்ளார். தினகரனின் வருகை அதிமுகவை மூன்றாக பிரிக்கும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிக அளவு சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவு அளித்தால், அதிமுக ஆட்சியே கவிழும் நிலை ஏற்படலாம்.