தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகரானார்

Source: Raj
உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பிராத்தனை செய்து வரும் அதே நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் "அர்ச்சகர் கனவு" நிறைவேறியிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறப்பித்த உத்தரவு தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. கோவில்களில் எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அன்று அவர் பிறப்பித்த ஆணை தற்போது உயிர்பெற்றுள்ளது. இது குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



