பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய பிரதேசத்தில், அக்கட்சியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரியணை ஏறியது. மத்திய பிரதேசத்தில் தற்போது கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. உட்கட்சி பூசல்களால் சிக்கி தவித்த வந்த மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் அவரின் ஆதரவாளர்கள் 22 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இதனால் மத்திய பிரதேசத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேமுதிக தரப்பில் அதிமுகவில் சீட் கோரப்பட்ட நிலையில், தீடீர் திருப்பமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான G.K.வாசனுக்கு அதிமுகவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மேலிட உத்தரவின் பெயரிலேயே G.K.வாசனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவின்றன. மேலும் விரைவில் ஜி.கே.வாசன் தமிழக பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் குறித்து ஒரு பார்வை. நமது தமிழக செய்தியாளர்!
Share





